Published : 05 Feb 2018 08:58 AM
Last Updated : 05 Feb 2018 08:58 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘நாகா அமைதி ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று 2015 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
3 ஆண்டுகள் ஆகியும் அந்த ஒப்பந்தத்தின் பலனை எங்கும் பார்க்க முடியவில்லை. இதன்மூலம் அர்த்தமில்லாத வார்த்தைகளை பேசிய முதல் இந்திய பிரதமர் என்ற சாதனை படைத்துள்ளார் மோடி” என பதிவிட்டுள்ளார்.
நாகாலாந்து தீவிரவாத பிரச்சினைக்கு தீர்வு காண, நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இது வடகிழக்கு மாநிலங்களுக்கான புதிய தொடக்கம் என்றும் 2015 ஆகஸ்ட் 3-ம் தேதி பிரதமர் மோடி தெரிவித்தார். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT