Published : 05 Feb 2018 08:53 AM
Last Updated : 05 Feb 2018 08:53 AM
மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் நேற்று நடைபெற்ற 25-வது மாநில கவிஞர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஷியா முஸ்லிகள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துவிட்டனர். இப்போது சன்னி முஸ்லிம்களும் இதற்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் அயோத்தியில் ராமர் கோயிலும், லக்னோவில் மசூதியும் கட்டும் திட்டத்தை உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியம், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT