Published : 05 Feb 2018 08:52 AM
Last Updated : 05 Feb 2018 08:52 AM
ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசுவின் கோமியத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில ஆயுர்வேத துறை இயக்குநர் டாக்டர் ஆர்ஆர் சவுத்ரி லக்னோவில் நேற்று கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் 8 ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆயுர்வேத மருத்துவத்தில் பசு கோமியமும் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது. கோமியம் உட்பட பசுவிடமிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 8 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கோமியம், பால், நெய் உள்ளிட்ட பசுவின் பொருட்கள் மிகவும் பயனுள்ளவை என புதிய ஆய்வுகளும் கூறுகின்றன.
இதுவரை கல்லீரல் நோய்கள், மூட்டு வலி மற்றும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு பசு கோமியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி வேறு பல நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும் பசு கோமியத்தைப் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளோம்.
உத்தரபிரதேசத்தில் அரசு சார்பில் 2 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் இயங்கி வருகின்றன. கூடுதலாக மருந்து உற்பத்தி நிறுவனங்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பல தனியார் நிறுவனங்கள் பசு கோமியத்தைக் கொண்டு மருந்துகளை தயாரித்து, அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தரையை சுத்தம் செய்யும் திரவங்களில் கோமியம் பயன்படுத்தப்படும் என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT