Published : 05 Feb 2018 08:49 AM
Last Updated : 05 Feb 2018 08:49 AM

இந்திய மீனவர் 47 பேர் கைது: பாக். தகவல்

எல்லை மீறி வந்து மீன் பிடித்ததாக 47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் வந்து அவர்கள் மீன்பிடித்ததாகவும், அதனால் அவர்களைக் கைது செய்ததாகவும் பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு ஏஜென்சி (பிஎம்எஸ்ஏ) தெரிவித்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19-ம் தேதி, எல்லை மீறி மீன்பிடித்ததாக 17 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்துச் சென்றனர். கடந்த டிசம்பரில், நல்லெண்ண அடிப்படையில் 292 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் விடுதலை செய்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x