Published : 01 Feb 2018 05:55 PM
Last Updated : 01 Feb 2018 05:55 PM
பொதுத்தேர்தலை நடத்த விரும்பி தாக்கல் செய்த பட்ஜெட் போல் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் வீரப்ப மொய்லி கூறியதாவது:
''இந்த பட்ஜெட்டை பார்க்கும் போது மத்திய அரசு நடப்பு வருடமே பொதுத்தேர்தலை நடத்த விரும்புவது போல் தெரிகிறது. இதை சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுடன் இணைத்து நடத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது என்பது போலும் உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் இவர்கள் உறுதி அளித்து வந்த 'அச்சே தி (நல்ல நாள்)' இன்னும் வந்தபாடில்லை. விவசாயிகளும் முழுவதுமாக அதிருப்தியாக உள்ளனர்.
கடந்த 5, 6 வருடங்களாக வந்த இயற்கை சீற்றங்களுக்கு எந்த இழப்பீடுகளும் அளிக்கப்படவில்லை. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாம் 72,000 கோடி ரூபாய் அளித்திருந்தோம். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு எந்த பிரச்சினைக்கும் தீர்வை கூறவில்லை. இவர்கள் ஆட்சியில் முதலீடுகளிலும் எதிர்மறையான நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் மாற்றம் வரும் நம்பிக்கையும் இதுவரை ஏற்படவில்லை. மொத்த உற்பத்தி வளர்ச்சியிலும் எந்த முன்னேற்றம் இல்லை. அவர்கள் கூறும் 7.1 சதவிகித வளர்ச்சி எங்கு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இது பொதுமக்களுக்கு எதிரான பட்ஜெட் ஆகும்.''
இவ்வாறு வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT