Published : 01 Feb 2018 08:41 AM
Last Updated : 01 Feb 2018 08:41 AM

ஊழல் புகார்: ஐஏஎஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

பிஹார் மாநிலம் சாப்ரா மாவட்ட முன்னாள் ஆட்சியர் தீபக் ஆனந்த் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.6 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவருக்கு சொந்த மான 4 இடங்களில் கடந்த ஜனவரி 4-ம் தேதி சோதனை நடைபெற்றது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனந்த் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததே, 24 பேர் பலியான படகு விபத்துக்குக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் ஆட்சியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x