Published : 01 Feb 2018 08:25 AM
Last Updated : 01 Feb 2018 08:25 AM
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் ஷா, பாகிஸ்தானில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஷாபீர் ஷாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவர் மீதும் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்ட முகமது அஸ்லாம் வானி மீதும் கடந்த நவம்பர் 15-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT