Last Updated : 06 Jan, 2018 01:07 PM

 

Published : 06 Jan 2018 01:07 PM
Last Updated : 06 Jan 2018 01:07 PM

மணிப்பூரில் சொந்த மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை

மணிப்பூரில் தன்னுடைய மகளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 42 வயது தந்தைக்கு, சிறப்பு நீதிமன்றம் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இதுதொடர்பாக செப்டம்பர் 19-ம் தேதி 2016-ல் தன்னுடைய கணவரே மகளை 3-க்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்துவிட்டதாக மனைவி வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட அடுத்த நாளே காவல்துறை அவரைக் கைது செய்தது.

சிறார்களுக்கான பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி, சிறப்பு நீதிபதி ஜி.கோல்மேய், வெள்ளிக்கிழமை அன்று கடுங்காவல் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதற்கு முன்னால் எந்தக் குற்றத்தையும் குற்றவாளி மேற்கொள்ளாததால், அவருக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டதாக நீதிமன்றத் தரப்பில் தெரிவிப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x