Last Updated : 06 Jan, 2018 12:39 PM

 

Published : 06 Jan 2018 12:39 PM
Last Updated : 06 Jan 2018 12:39 PM

காஷ்மீரில் வெடிப்பொருளை இயக்கிய தீவிரவாதிகள்: 4 காவலர்கள் பலி

காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட வெடிப் பொருளை (IED) தீவிரவாதிகள் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை காலை பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் நடந்துள்ளது.

இதுகுறித்து வெளியான ஆரம்பகட்ட தகவல்களின்படி, வெடி சாதனம் அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் அங்கே சென்றவுடன் அது வெடித்துள்ளது.

இதனால் அங்கிருந்த மூன்று கடைகள் சேதமடைந்துள்ளன. விபத்து நடந்த பகுதி தற்போது பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x