Published : 06 Jan 2018 10:08 AM
Last Updated : 06 Jan 2018 10:08 AM
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல் முடங்கியது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களைச் சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார். இதற்கு ராகுல் காந்தி, “பிரதமர் மோடி நினைப்பது ஒன்று, பேசுவது வேறு என தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என கிண்டல் செய்தார்.
இதையடுத்து மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அவை விதி 187-ன் கீழ் பாஜக உறுப்பினர் புபிந்தர் யாதவ் நோட்டீஸ் அளித்தார்.
“மாநிலங்களவை பாஜக தலைவர் அருண் ஜேட்லியை ராகுல் வேண்டுமென்றே அவமரியாதை செய்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இந்த நோட்டீஸ் மீது அவைத் தலைவரின் முடிவை அறிய விரும்புவதாக புபிந்தர் யாதவ் கூறினார்.
இதற்கு மாநிலங்களவை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, “இந்த நோட்டீஸ் எனது பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என்றாலும் இது மக்களவை விதிகளுக்கு உட்பட்ட தாக இருக்கும். இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT