Published : 06 Jan 2018 09:59 AM
Last Updated : 06 Jan 2018 09:59 AM
உலகை வழிநடத்துவது இந்தியாவின் கடமை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதாவது: உலகம் முழுவதற்கும் பொதுவானது இந்திய கலாச்சாரம். வாழும் கலையை உலகிற்கு இந்தியா கற்பித்து வருகிறது.
உலக ஒற்றுமையின் அடையாளமாக சிவபெருமான் திகழ்கிறார். எனவே உலகை வழிநடத்த வேண்டியது நமது கடமை. சிவபெருமான் தீய சக்திகள் அனைத்தையும் அழித்தவர். அவரின் முதல் பெயர் ருத்ரா. அதன் அர்த்தம் சக்தி என்பதாகும்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் சிவபெருமானின் குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த போரை நடத்த வேண்டிய அவசியமில்லை. சுயநலத்தை தியாகம் செய்தாலே அமைதியை நிலைநிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT