Published : 06 Jan 2018 09:51 AM
Last Updated : 06 Jan 2018 09:51 AM

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 நக்சல்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள முடுவாண்டி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார் - சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய கூட்டுப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் வருவதைக் கண்ட நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணிநேரம் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x