Published : 06 Jan 2018 09:49 AM
Last Updated : 06 Jan 2018 09:49 AM
பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்குகிறது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் அமைந்துள்ள இக்கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயில் கண்காணிப்பாளர் தனபால் கடந்த பவுர்ணமி தினத்தில், அங்குள்ள காலபைரவர் சன்னதியில் சிலருடன் மாந்திரீக பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் விசாரணை நடத்திய கோயில் நிர்வாக அதிகாரி பிரமராம்பிகா, தனபாலை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT