Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரைக் கூறிக் கொண்டு ரூ.6 கோடி கேட்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்துள்ளது.
மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் அல் சித்திக். 59 வயது தொழிலதிபரான இவருக்கு வாலிவ் பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்த ஒரு கும்பல், இடத்தை காலி செய்ய வேண்டுமென்றால் ரூ.6 கோடியைத் தரவேண்டும் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த மிரட்டல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரில் வந்துள்ளது.
இதுகுறித்து பால்கர் பகுதி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திலக் ராஜ் ரோஷன் கூறும்போது, “அல் சித்திக்கை அந்த கும்பல் நீண்ட நாட்களாக மிரட்டி வந்துள்ளது. ரூ.6 கோடி கொடுத்தால்தான் இடத்தை காலி செய்வோம். இதில் ரூ.5 கோடி தாவூத் இப்ராஹிமுக்கும், ரூ.1 கோடி தங்களுக்கும் என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது. புகாரின் அடிப்படையில் அந்த கும்பலைச் சேர்ந்த அப்துல் அக்வான், அனீஸ் சிங், அப்துல் இப்ராஹிம், முகமது நகோரி, ஷரபுதீன் ஷேக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் ” என்றார்.
மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம் தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக கூறப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT