Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

ஆந்திர பல்கலை. கட்டிடம் திறப்பு

ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆந்திர பல்கலைக்கழக கட்டிட அரங்கு திறந்து வைக்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலை கழகம் மிகவும் பிரபலமானது. இந்த பல்கலைக்கழகத்துக்கு நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வருகை புரிந்தார். பின்னர் அவர் பல்கலைக்கழகத்தில் ரூ.15 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட அரங்கை திறந்து வைத்தார்.

முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இவ்விழாவில் ஆந்திர மாநில கல்வித் துறை அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாஸ், பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் ஆலோசனை கூட்டம் புதிய அரங்கில் மாலையில் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x