Published : 13 Oct 2017 09:33 AM
Last Updated : 13 Oct 2017 09:33 AM

மகாராஷ்டிர தேர்தலில் காங். வெற்றி

மகாராஷ்டிராவில் நான்டெட்-வகாலா நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மொத்தம் 81 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சிக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 46 வார்டுகளில் 43-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் நகராட்சியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது. மேலும் 20 வார்டுகளில் இக்கட்சி முன்னணியில் இருந்தது.

ஆளும் பாஜக மற்றும் சிவசேனாவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், இக்கட்சி வேட்பாளர்கள் தலா 1 இடத்திலும் சுயேச்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

2012-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 41 வார்டுகளில் மட்டுமே வென்றது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் இக்கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவானின் செல்வாக்கு பெற்ற இந்நகரில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x