Published : 13 Oct 2017 09:27 AM
Last Updated : 13 Oct 2017 09:27 AM

தேசியக் கொடியை அவமதித்த விவகாரம்: ஹர்திக் படேல் மீதான வழக்கு வாபஸ்

குஜராத்தில் படேல் இனத்தவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி 2015-ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. படிதர் அனாமத் அந்தோலன் சமிதி (பிஏஏஎஸ்) சார்பில் நடைபெற்ற இதற்கு ஹர்திக் படேல் தலைமை தாங்கினார். ராஜ்கோட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த கந்தேரி மைதானத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீஸார் தடுத்தபோது தேசியக் கொடியின் மீது தாண்டிச் சென்றதாக ஹர்திக் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ராஜ்கோட் ஆட்சியர் விக்ராந்த் பாண்டே நேற்று வாபஸ் பெற்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x