Published : 14 Aug 2015 06:14 AM
Last Updated : 14 Aug 2015 06:14 AM
ஜம்மு காஷ்மீர் மாநில இமய மலையில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு நேற்று புதிய குழு ஒன்று பயணமானது. இந்தக் குழுவில் 98 யாத்ரீகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமர்நாத் பனிலிங்கத்தை நேற்று முன்தினம் வரை 3,44,517 பேர் தரிசித்துள்ளனர். இந்தப் புதிய குழுவோடு சேர்த்து இதுவரை 48,320 பேர் ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத்துக்குப் பயணமாகியுள்ளனர்.
86 ஆண்கள் 12 பெண்கள் கொண்ட இந்தப் புதிய குழு நேற்று அதிகாலை சுமார் 4.35 மணி அளவில் பகவதி நகர் முகாமில் இருந்து பயணமாயினர்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்பில் 4 வாகனங்களில் சென்ற இந்தப் புதிய குழுவினர், நேற்று இரவு பஹல்கம் மற்றும் பால்டால் பகுதியை அடைந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT