Published : 01 Aug 2015 10:55 AM
Last Updated : 01 Aug 2015 10:55 AM

5 ஆண்டுகளுக்குப் பின் திருமலையில் பெட்ரோல் பங்க்: தேவஸ்தானம் அனுமதி

திருமலையில் கடந்த 5 ஆண்டுகளாக பெட்ரோல் பங்க் செயல்படவில்லை. சமீபத்தில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பதி கோயிலுக்கு பல வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இவர்களில் பலர் கார், ஜீப், மோட்டார் பைக் போன்ற வாகனங்கள் மூலமாகவும் திருமலைக்கு வருகின்றனர். வாகனங்கள் மூலம் திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் சில புகார்கள் வந்ததின் பேரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலையில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் திருமலைக்கு வரும் கார், ஜீப், பைக் போன்ற வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். டீசல், பெட்ரோல் தீர்ந்து போன வாகனங்களுக்கு திருப்பதியில் இருந்து பெட்ரொல், டீசல் கொண்டுவரவும் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திருமலைக்கு வரும் போதே திருப்பதி நகரில் பெட் ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 3 நாட் களுக்கு முன்னர் தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைவில் திருமலையில் 3 இடங்களில் பெட்ரோல் பங்க் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x