Published : 03 Jul 2017 10:18 AM
Last Updated : 03 Jul 2017 10:18 AM
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டிருப்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அடுத்த மூன்று மாதங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். தவிர கணக்குப்பதிவியல் துறையில் 60,000 வேலை வாய்ப்புகள் உரு வாகும். ஜிஎஸ்டி தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா வில் கடந்த ஆறு மாதங்களில் 1,118 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு தொழிற் துறை அமைப்புகளுடன் சேர்ந்து நிதி அமைச்சகம் இந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருந்தது. இதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி குறித்த புரிதல் கிடைத்திருக்கும்.
தவிர ஜிஎஸ்டி தொடர்பாக 150 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. வர்த்தர்களுக்கு உதவும் விதமாக ஜிஎஸ்டி குறித்த அனைத்து தகவல்களும் இந்த மையத்தில் கிடைக்கும். 17 வகையான வரி விகிதங்கள் இருந்தன. இவை அனைத்தும் தற்போது ஒரே வரியாக இருந்தது. தவிர 1,500-க்கும் மேற்பட்ட படிநிலைகள் இருந்தன. ஆனால் இவை தற்போது நான்காக குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டியால் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயரும். முக்கிய பொருட்களின் விலை குறைவதால் பணவீக்கம் குறையும் என தத்தாத்ரேயா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT