Published : 09 Jan 2015 12:22 PM
Last Updated : 09 Jan 2015 12:22 PM
ஹைதராபாத் அருகே பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அரசு பஸ்ஸை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்றுள்ளனர்.
ஹைதராபாத் குஷாய் கூடா பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் தினமும் செகெந்திராபாத்-எதுலாபாத் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர், ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், எதுலாபாத் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தினார்.
பணி முடிந்ததால் பஸ் நிலையத்திலேயே உள்ள ஓட்டுநர்களின் ஓய்வறையில் உறங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது பஸ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ் நிலையத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளின் ஆலோசனைப்படி நேற்று காட்கேசரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT