Published : 14 Aug 2015 05:27 PM
Last Updated : 14 Aug 2015 05:27 PM
பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் மியான்மாரைச் சேர்ந்த 4 பேர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹர்குத் உல் ஜிகாதி அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது நஸி உள்ளிட்ட 4 பேர் ஹைதராபாதின் சங்ச்சல்குடா பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்ததாக சிறப்பு காவற்படை அதிகாரிகள் கூறினர். கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்த நஸி என்ற நபர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஹுஜி எனப்படும் ஹர்குத் உல் ஜிகாதியுடன் தொடர்புடையதாக சந்தேகப்படுவதாகவும் இது குறித்து ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் ஹைதராபாத் போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் 2 ஏஜெண்ட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கியிருந்த வீட்டிலிருந்து சந்தேகத்துக்குரிய ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு காவற்படை அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT