Published : 14 Aug 2015 06:18 AM
Last Updated : 14 Aug 2015 06:18 AM
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா ஏவுகணை சோதனை கூடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 ஊழியர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் சர்வதேச ஏவுகணை பரிசோதனை மையத்தில் தற்போது ஜி.எஸ்.எல்.வி ஏவுகணை பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏவுகணை வரும் 27-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் சோதனை மையத்தில் உள்ள 169-வது பவனில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென தீப்பொறி ஏற்பட்டது.
இதனை கவனித்த ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது தவறி கீழே விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT