Published : 05 Jan 2017 09:41 AM
Last Updated : 05 Jan 2017 09:41 AM
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலவார் மாவட்டம், கீட்டியா ஊராட்சி மன்றத்தில் எழுத்தராக பணிபுரிபவர் ஹேமராஜ் சிங். இதுபோல் ஜாலவார் மாவட்டம், பிஷானியா என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரிய ராக பணிபுரிபவர் பிரேம் சிங்.
இவர்களைப் பற்றி மாவட்ட துணை ஆட்சியர் கங்காதர் சந்தன் துபே கூறும்போது, “பொது வெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக அரசு பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தப் பணியில் ஆசிரியர்களும் ஊராட்சி மன்ற ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த இருவரின் வீட்டில் கழிப்பறை இல்லை எனத் தெரியவந்தது. பிரச்சாரம் செய்யும் ஒருவரே அதை கடை பிடிக்காவிட்டால் மக்கள் எப்படி அதை பின்பற்றுவார்கள்? எனவே இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT