Published : 14 Aug 2015 06:19 AM
Last Updated : 14 Aug 2015 06:19 AM

விசாரணைக் கைதிகள் 3 பேர் தப்பி ஓட்டம்

சிறையில் அடைக்க வேனில் கொண்டு சென்றபோது, தப்பிய 3 கைதிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 5 திருடர்களை தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

இவர்களை நேற்று மாலை சங்காரெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இவர்களை வேனில் சிறைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் போலீஸாரின் பிடியில் இருந்து 3 கைதிகள் தப்பி ஓடினர். இவர்களை பிடிக்க மேதக் மாவட்ட போலீஸார் தனிப்ப‌டை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x