Last Updated : 09 Jul, 2017 12:19 PM

 

Published : 09 Jul 2017 12:19 PM
Last Updated : 09 Jul 2017 12:19 PM

வாக்கு வங்கி அரசியல் செய்தவர்கள் இஸ்ரேலைப் புறக்கணித்தனர்: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்

70 ஆண்டுகளில் இஸ்ரேலுக்குச் சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி என்ற பின்னணியில் பேசிய உ.பி.முதல்வர் ஆதித்யநாத், முந்தைய மத்திய ஆட்சியாளர்களை சாடினார்.

“கடந்த ஆட்சியாளர்களிடத்தில் அமெரிக்கா செல்வதில் தனிக் கவனம் இருந்தது. ஆனால் யாரும் இஸ்ரேல் செல்ல விரும்பவில்லை, அவர்கள் தங்கள் வாக்கு வங்கி அரசியலில் அக்கறை செலுத்தினர்.

இப்போது நாட்டைப் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர், எனவே நாட்டின் முன்னேற்றம் பற்றிய அக்கறை ஏற்பட்டுள்ளது” என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மோடியின் இஸ்ரேல் பயணத்தைப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x