Published : 23 May 2015 08:41 AM
Last Updated : 23 May 2015 08:41 AM
ஜனதா கட்சிகளின் மூத்த தலைவர் கள் முலாயம் சிங், லாலு பிரசாத், சரத் யாதவ் உள்ளிட்டோர் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் இந்தக் கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார்.
சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 6 ஜனதா கட்சிகள் ஒன்றி ணைக்கப்படும் என்று அந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித் துள்ளனர். இதுதொடர்பாக ஜனதா கட்சிகளின் மூத்த தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால் இந்தக் கூட்டத்தை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் புறக்கணித்துவிட்டார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று லாலு பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தங்கள் அணியில் இணைய வேண்டும் என்று அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை நிதிஷ் குமார் விரும்பவில்லை. பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாஞ்சியை ஜனதா அணியில் சேர்க்கக்கூடாது என்று அவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஆனால் லாலு பிரசாத் தனது கருத்தில் பிடிவாதமாக உள்ளார்.
இதனால் நேற்றைய கூட்டத்தை நிதிஷ்குமார் புறக்கணித்தார். நேற்று அவர் டெல்லியில் முகாமிட்டிருந்தாலும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT