Last Updated : 31 May, 2016 09:44 AM

 

Published : 31 May 2016 09:44 AM
Last Updated : 31 May 2016 09:44 AM

மத்திய மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

மின்சார மசோதாவை தாக்கல் செய்தால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய மின்சாரத் துறை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

அகில இந்திய மின்சார பொறி யாளர்கள் கூட்டமைப்பு (ஏஐபி இஎப்) விடுத்துள்ள அறிக்கையில், “இந்த மசோதா தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எங்களிடம் பல்வேறு உறுதி மொழிகளை அளித்துள்ளார். இந்த உறுதிமொழிகள் மசோதாவில் இடம்பெற வேண்டும். மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன் எங்களிடம் ஆலோசிக்க வேண்டும். இதை அரசு செய்யத் தவறினால் ஒரு நாள் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

மின்சார வர்த்தகத்தில் போட் டியை அனுமதிக்கவும், நுகர்வோர் தொலைபேசி நிறுவனங்களை தேர்வு செய்துகொள்வது போல் மின் வினியோக நிறுவனங்களை தங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளவும் மின்சார மசோதா வகை செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x