Published : 06 Oct 2016 10:31 AM
Last Updated : 06 Oct 2016 10:31 AM

பெங்களூருவில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; 8 பேர் காயம்

பெங்களூருவில் உள்ள 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூரில் 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. நேற்று மதியம் 12.35 மணி அளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து மீட்பு படையினர் குழாய்கள் மூலம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை அனுப்பினர். ஒரு மணிநேர போராட் டத்துக்குப் பிறகு நால்வரும் மீட்கப்பட்டனர்.

இந்தக் கட்டிடத்தில் பாதுகாவல ராக பணியாற்றிய அசோக் மெஹந்தி (30) தரைத்தளத்தில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 8 பேர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் தீயணைப்பு ப‌டையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x