Last Updated : 14 Aug, 2015 06:35 AM

 

Published : 14 Aug 2015 06:35 AM
Last Updated : 14 Aug 2015 06:35 AM

பிஹார் தேர்தல் தொகுதி பங்கீடு: நிதிஷ் கூட்டணியில் பிளவு? - 3 தொகுதி ஒதுக்கியதால் என்சிபி ஆவேசம்

பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மதச்சார்பற்ற மெகா கூட்டணியில் பிளவு ஏற்பட் டுள்ளது. கூட்டணியில் இடம்பெற் றுள்ள தேசியவாத காங்கிரஸுக்கு (என்சிபி) 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதால், அந்தக் கட்சியினர் ஆவேசம் அடைந்துள்ளனர்.

பிஹாரில் வரும் அக்டோபர் - நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக.வை வீழ்த்த ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. பிஹாரில் மொத்தம் 243 தொதி கள் உள்ளன. இதில், ஆளும் ஐஜத.வும் லாலு பிரசாத்தின் ராஷ் டிரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளன. காங்கிர ஸுக்கு 40 இடங்களும் தேசியவாத காங்கிரஸுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி அவமானப்படுத்தி விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான தாரிக் அன்வர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “12 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால், தொகுதி பங்கீடு குறித்து எங்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தாம லேயே 3 தொகுதிகளை அவர் களாக ஒதுக்கி உள்ளனர்.

இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முதல்வர் நிதிஷ்குமார் அவமானப்படுத்தி விட்டார். எங்களை புறக்கணித் துள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாது.

வரும் 16-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x