Published : 28 Jun 2016 09:30 AM
Last Updated : 28 Jun 2016 09:30 AM
பிஹாரில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் ரூபி ராய் என்ற மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரிடம் பேட்டி எடுத்த உள்ளூர் ஊடகங்கள் பாடம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டன. அப் போது அரசியல் அறிவியல் என்பது சமையல் கலையை பற்றி யது என பதில் அளித்து அனை வரையும் அதிர்ச்சி அடைய வைத் தார். இதேபோல் முதலிடம் பிடித்த மேலும் சில மாணவர்களும் அடிப் படை கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாமல் திணறினர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் ரூபி ராய் படித்த பள்ளியின் முதல்வர் உட்பட பலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி முதல்வர் பச்சா ராய், முன்னாள் தேர்வு வாரிய தலைவர் லால்கேஷ்வர் சிங், அவரது மனைவி உஷா சிங், ஜஜதவின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாணவி ரூபி ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறப்பு புல னாய்வு குழு நடத்திய விசாரணை யில் தேர்வு வாரியத்தின் முன்னாள் செயலர் ஹரிஹர் நாத் ஜாவும் சிக்கியுள்ளார். அவரையும் போலீ ஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT