Last Updated : 09 Jan, 2015 02:15 PM

 

Published : 09 Jan 2015 02:15 PM
Last Updated : 09 Jan 2015 02:15 PM

பாரீஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவாக பேசிய உ.பி. முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு

பிரான்ஸ் அங்கத வார இதழ் சார்லி ஹெப்டோ மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்துப் பேசியதாக முன்னாள் உ.பி. அமைச்சர் யாகூப் குரேஷி மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷி மொகமது நபியை இழிவு படுத்தியவர்கள் மரணத்தை வரவேற்றுள்ளனர் என்று பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் மீது வன்முறைக்கு தூண்டுவதாக பிரிவு 505, 1 (சி)-யின் கீழ் உ.பி. போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

புதனன்று ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x