Published : 14 Aug 2015 12:59 PM
Last Updated : 14 Aug 2015 12:59 PM
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் சுதந்திர தினத்தை ஒட்டி அந்நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதல், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த தாக்குதல் ஆகிய சம்பவங்களால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமரின் வாழ்த்து வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT