Published : 22 Mar 2017 12:02 PM
Last Updated : 22 Mar 2017 12:02 PM

பாகிஸ்தானில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணை மீட்கும் பணியில் சுஷ்மா ஸ்வரஜ்

பாகிஸ்தானில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஈடுபட்டுள்ளார்.

தெலுங்கானாவைச் சேர்ந்தவர் முகமதியா பேகம். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு சியால்கோட் நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முகமதியா பேகம் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்குவதாகவும், தான் இந்தியா வர விரும்புவதாகவும் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முகமதிய பேகத்தின் தந்தை முகமத் அக்பர், பாகிஸ்தானிலுள்ள பேகத்தை மீட்கும்படி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் முறையிட்டுள்ளார். மேலும் இந்தியத் தூதரக அதிகாரிகள் பேகத்தை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேகத்தை சந்தித்ததாகவும், அவர்களிடம் இந்தியா வர பேகம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பதிவிட்டார்.

பேகத்தின் விசாவை புதுப்பிக்கவும், அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் இந்திய தூதரகத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பேகம் மற்றும் அவரது தாயார் நடத்திய உரையாடல் வீடியோ பதிவை மஜிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அம்ஜித் உல்லா கான் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அம்ஜித் உல்லா கான் கூறும்போது, "பாகிஸ்தானில் சிக்கியுள்ள முகமதியா பேகம் இறைவனையும் இந்திய அரசையும் நம்புகிறார். குறிப்பாக வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரஜ் மீது நம்பிக்கை வைத்துள்ளார். விரைவில், பேகத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து இந்தியா அழைத்துச் செல்வதாக இந்திய தூதரக அதிகாரிகள் அவரிடம் உறுதியளித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x