Published : 30 Dec 2016 08:26 PM
Last Updated : 30 Dec 2016 08:26 PM
நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. பழைய நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள் டெபாசிட் செய்யலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக 50 நாள் காலக்கெடு முடிவடைந்து.
வங்கி நேர முடிவில் எவ்வளவு தொகை இருக்கிறது என்னும் தகவலை உடனடியாக இமெயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளாது.
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் தங்கள் கிளைகளில் எவ்வளவு பழைய நோட்டுகள் தொகை இருக்கிறது என்பதை ஒருங்கிணைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை இன்று (டிசம்பர் 31) ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் வங்கிகளின் வரவுகளில் இருக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT