Last Updated : 30 Dec, 2016 08:48 AM

 

Published : 30 Dec 2016 08:48 AM
Last Updated : 30 Dec 2016 08:48 AM

பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு 4,172 கோடி கறுப்புப் பணம் சிக்கியது: வருமான வரித் துறை தகவல்

பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு கறுப்புப் பணத்துக்கு எதிராக நாடு முழுவதும் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் கணக்கில் காட் டப்படாத ரூ.4,172 கோடி கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் ரூ.105 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

இதுகுறித்து அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு வருமான வரித் துறை சார்பில் 983 சோதனை, மதிப்பீடு, விசாரணைப் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டு களுடன் 5,027 நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் ரூ.549 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் மட்டும் ரூ.458 கோடியாகும். மேலும் ரூ.105 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் (இதில் பெரும்பாலானவை ரூ.2000 நோட்டுகள்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 8-க்கு பிறகு டிசம்பர் 28-வரை கணக்கில் காட்டப்படாத ரூ.4,172 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, சொத்துக் குவிப்பு, ஊழல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 477 வழக்குகளை விசாரிக்கும்படி சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற பிற அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x