Published : 05 Jan 2017 09:34 AM
Last Updated : 05 Jan 2017 09:34 AM

நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக வளாகத் தில் சிறுவர்கள் அறிவியல் மாநாட்டை சந்திரபாபு நாயுடு நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு மாணவரும் வருங் காலத்தில் பெரிய குறிக்கோளுடன் முன்னேற வேண்டும். தற்கால இளைஞர்கள் ஒவ்வொரு அம்சத் தையும் கூர்ந்து கவனிக்கின்றனர். சிறுவர்கள் செல்போன், கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்று டன் விளையாடும்போது அவர் களது அறிவும் வளர்ச்சி அடை கிறது. சிறிய ஆலோசனையே பெரிய திட்டத்திற்கு வித்திடுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

விளையாட்டையும், விளை யாட்டு வீரர்களையும் ஊக்குவிப் பது போல் அறிவியலில் சாதிப் பவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். ஆதலால், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால், அவர் களுக்கு அரசு சார்பில் ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும். மேலும் அவர்கள் அறிவியல் ஆய்வுக்காக நம் நாட்டில் எந்த மையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் அவர்களுக்கு ஆந்திர அரசு உதவி செய்யும்” என்றார்.

பின்னர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 6-வது தேசிய மகளிர் அறிவியல் மாநாட்டையும் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

இவ்விழாக்களில் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி, மாநில அமைச்சர்கள் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, கண்டா ஸ்ரீநிவாச ராவ், நாராயணா, பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் துர்கா பவானி மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x