Published : 06 Jan 2015 12:32 PM
Last Updated : 06 Jan 2015 12:32 PM

நிலக்கரி சுரங்க தனியார் மயமாக்கலை எதிர்த்து 5 நாள் வேலைநிறுத்தம்

நிலக்கரி சுரங்க தனியார் மயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோல் இந்தியா நிறுவனத்தின் ஐந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கின.

பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஹெச்.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று முதல் 5 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் 1.5 மில்லியன் டன் வரை நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x