Last Updated : 06 Oct, 2016 10:17 AM

 

Published : 06 Oct 2016 10:17 AM
Last Updated : 06 Oct 2016 10:17 AM

துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமருடன் மெகபூபா சந்திப்பு: காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, அம்மாநில நிலவரம் குறித்து அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அழைப்பு மற்றும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமரிடம் மெகபூபா எடுத்துரைத் தார். காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிய அவர், இவற்றுக்கு மத்திய அரசின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துதற்கு தனது அரசு மேற்கொண்டுள்ள பணிகளையும் அவர் விளக்கினார்.

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. எல்லைக்கப்பால் இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதலுக்கு பிறகு முதன்முறையாக பிரதமரை மெகபூபா சந்தித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x