Published : 01 Aug 2015 10:49 AM
Last Updated : 01 Aug 2015 10:49 AM

திருப்பதி கோயில் குளத்தில் குளிக்க தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற இருப்பதால் கோயில் அருகே உள்ள குளத்தில் (புஷ்கரணி) இன்று முதல் மராமத்து பணி நடைபெற உள்ளது. இதையடுத்து கோயில் குளத்தில் குளிக்க தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அக்டோபர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது திருப்பதி மற்றும் திருமலையில் நடைபெற்று வருகின்றன.

கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணி என்றழைக்கப்படும் கோயில் குளத்தில் மராமத்து பணி இன்று தொடங்கப்படுகிறது. இப்பணிகள் சுமார் ஒரு மாதம் வரை நடைபெற இருப்பதால், இன்று முதல் இக்குளம் மூடப்படுகிறது. இதனால் கோயில் குளத்தின் அருகே பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x