Published : 29 Nov 2014 09:56 AM
Last Updated : 29 Nov 2014 09:56 AM

திருப்பதியில் செம்மரக் கடத்தல்: தமிழக கூலித் தொழிலாளர்கள் 84 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத் தில் நேற்று திருப்பதி, ஸ்ரீகாள ஹஸ்தி உள்ளிட்ட இடங்களில் ஆந்திர காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 8 வாகனங்களில் கடத்தப் பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் தமிழகத்தை சேர்ந்த 84 கூலி தொழிலாளர்களை கைது செய்தனர்.

திருப்பதியில் உள்ள சேஷா சலம் வனப்பகுதியில் இருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்கள் நாள்தோறும் கடத்தப்படுகின்றன. இதனைத் தடுக்க ஆந்திர காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் தினமும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் பயிற்சி பெற்ற ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள புச்சி நாயுடு கண்டிகை, தொட்டம்பேடு மற்றும் திருப்பதி அருகே உள்ள சந்திகிரி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டபோது, லாரி, கார்களில் செம்மரங்கள் கடத்தும் கும்பல் பிடிபட்டது. இதில் ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 84 கூலி தொழிலாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x