Published : 31 May 2016 09:32 AM
Last Updated : 31 May 2016 09:32 AM

திக்விஜய் சிங் சர்ச்சை கருத்து: சோனியா வீடு முன்பு பாஜக.வினர் போராட்டம்

பட்லா என்கவுன்ட்டர் போலியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதைக் கண்டித்து, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பாட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் ஒரு காவல் துறை அதிகாரி இறந் தனர். இது போலி என்கவுன்ட்டர் என்றும் இதுகுறித்து நீதி விசார ணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் சமீபத்தில் தெரிவித் திருந்தார்.

இதைக் கண்டித்து டெல்லியில் சோனியா வீடு அருகே பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறும்போது, “பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் போலியானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்காக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியலுக்காக நாட்டை துண்டாட காங்கிரஸ் முயற்சிக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x