Last Updated : 06 Oct, 2016 10:15 AM

 

Published : 06 Oct 2016 10:15 AM
Last Updated : 06 Oct 2016 10:15 AM

தவறாக எல்லை தாண்டிய சிறுவன் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த போதும், குடிநீர் தேடி தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் வசம் ஒப்படைத்தனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை ஒட்டி பாகிஸ் தானின் கசூர் மாவட்டம் அமைந் துள்ளது. பாகிஸ்தான் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் முகமது தன்வீர்.

இச்சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, தாகம் எடுக்கவே, போர்வெல்லில் இருந்து தண்ணீர் குடிக்க கவன மின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான்.

அச்சிறுவனை பெரோஸ்பூர் சோதனைச் சாவடி அதிகாரிகள் பிடித்து விசாரித்தபோது, தவறுத லாக இந்திய எல்லைக்குள் நுழைந் தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய எல்லைப் பாது காப்புப் படையினர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் அச்சிறுவனை ஒப்படைத்தனர்.

பாகிஸ்தான் செல்வதற்கு முன் சிறுவன் தன்வீர் கூறும்போது, இந்தியாவில் தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டதாகத் தெரி வித்தான்.

பிஎஸ்எப் பஞ்சாப் பிரிவு டிஐஜி ஆர்.எல் கடாரியா கூறும்போது, “இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே மாடு மேய்த்த சிறுவன், அதிக தாகம் காரணமாக தண்ணீர் குடிக்க, கவனமின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x