Last Updated : 31 May, 2016 09:46 AM

 

Published : 31 May 2016 09:46 AM
Last Updated : 31 May 2016 09:46 AM

ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட பிரதமரின் விமானம்

கர்நாடகாவில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், மோசமான வானிலை காரணமாக, ஜெய்ப் பூருக்கு திருப் பிவிடப்பட்டது. ஜெய்ப்பூரில் 2 மணி நேரம் காத்திருந்து, பின்னர் நள்ளிரவில் டெல்லியை அடைந் தார் பிரதமர்.

பிரதமர் நரேந்திரமோடி, ஞாயிற்றுக்கிழமையன்று கர்நாடகா வில் உள்ள தாவணகெரேயில் நடந்த பொதுக்கூட்டத்தை முடித்துக் கெ ாண்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் லேசான மழையுடன் கூடிய புழுதிப்புயலும் வீசிக்கொண்டிருந்ததால், பிர தமரின் விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

ஜெய்ப்பூரில் இரவு 9.15 மணிக்கு பிரதமரின் விமானம் தரையிறங்கியது. சுமார் 2 மணி நேரம் வரை அங்கு பிரதமர் காத் திருந்தார். வானிலை சீரானதும், ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு நேரத்தில் பிரதமரின் விமானம் டெல்லியை அடைந்தது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே பல இடங்களில் லேசான மழை பெய்தது. இரவு 9 மணிக்கு, மழையுடன் கூடிய புழுதிப் புயல் மணிக்கு 52 முதல் 92 கிமீ வேகம் வரை வீசியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x