Published : 14 Aug 2015 06:19 AM
Last Updated : 14 Aug 2015 06:19 AM

ஜெகன்மோகனின் ரூ.7.85 கோடி சொத்துகள் முடக்கம்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ரூ. 7.85 கோடி சொத்துகளை அமலாக்க பிரிவு முடக்கியது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி அவரது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சி காலத்தில் சட்ட விரோதமாக பல கோடி சொத்துகளை சேர்த்ததாக அமலாக்க பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக அவரின் சொத்துகளை அமலாக்க துறை தொடர்ந்து முடக்கி வருகிறது. அந்த வரிசையில் பயனீர் ஹாலி டே ரிசார்ட்ஸ் மற்றும் பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 7.85 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x