Published : 23 May 2015 07:49 PM
Last Updated : 23 May 2015 07:49 PM
வெள்ளிக்கிழமையன்று பிஹார் தேசிய கவி திங்கர் என்பவரை நினைவூட்டி பிஹார் மக்கள் சாதி அரசியலிலிருந்து மீள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய மறு நாளான சனிக்கிழமையே பிஹார் பாஜக தலைவர்கள் சாதி அமைப்பின் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்
மூத்த பாஜக தலைவரான சுஷில் குமார் மோடி, நந்த் கிஷோர் யாதவ் உட்பட பிஹார் தலைவர் மங்கல் பாண்டே ஆகியோர் ‘கோஸ்வாமிஸ்’ நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
வரும் திங்கள் முதல் பிஹார் பாஜக, உறுப்பினர்கள் சேர்ப்பு வேட்டையை தொடங்கவுள்ளது இதில் புதிய உறுப்பினர்களாக ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கபடுகிறது, இதில் உறுப்பினரின் சாதி விவரத்தைக் கோரும் பத்தி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
"பிஹார் மக்கள் சாதி அரசியலைக் கடந்து வராவிட்டால் சமூக வளர்ச்சி பாதிக்கும்” என்று நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை அடுத்து மறுநாளே இந்த விவரம் வெளியாகியுள்ளது.
சரி, உறுப்பினர் படிவத்தில் எதற்கு சாதி விவரம் என்று மங்கள் பாண்டேயிடம் கேட்ட போது, “புதிய உறுப்பினரின் முழு சுயவிரத்தைத் தயாரிக்கவே. இது மிகவும் பழைய நடைமுறை, எங்கள் கட்சி உறுப்பினரின் முழு சுய விவரங்களைய்யும் பராமரிக்க விரும்புகிறோம், இதனால்தான் ஒட்டு மொத்த விவரம் கோரப்படுகிறது” என்றார்.
நாடு முழுதும் பாஜக-வில் சேர்ந்த 1.1 கோடி புதிய உறுப்பினர்களில் பிஹார் மட்டும் 95 லட்சம் உறுப்பினர்கள் என்று பங்களிப்பு செய்துள்ளது.
சாதி கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பற்றி பாஜக தலைவர் மங்கள் பாண்டே கூறும்போது, “அப்படிப்பட்ட சாதி நிகழ்ச்சிகள் கட்சி உறுப்பினர்களால் நடத்தப்படுவதல்ல, வாக்கு வங்கிக்காக பாஜக தலைவர்கள் அங்கு செல்வதில்லை, மாறாக மக்கள் மீது நம்பிக்கையை வலுப்படுத்தி மைய நீரோட்ட வளர்ச்சிப் பாதைக்கு அவர்களை அழைத்து வரவே செல்கிறோம்” என்று ஒரே போடாக போட்டார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் சாம்ராட் அசோகருக்கு புகழாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், அசோகச் சக்ரவர்த்தியின் புகழ்பாடும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அசோகர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பான குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT