Published : 06 Jan 2015 10:51 AM
Last Updated : 06 Jan 2015 10:51 AM

கிராமத்துக்குள் புகுந்த கரடி இருவரை கடித்து கொன்றது

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிராமத்துக்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் உட்பட இருவரை கொன்றது.

சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரு கரடி புகுந்தது.

ஊர் மக்கள் ஒன்று கூடி நெருப்பை காட்டியும், கூச்சலிட்டும் கரடியை விரட்டினர். எனினும் அப்போது காட்டுக்குள் சென்ற கரடி மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து மக்களை தாக்குவது என்று சம்பவங்கள் தொடர்ந்தன.

கரடி தாக்கியதில் கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார். இதை யடுத்து வனத் துறையின ருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத் துறையினர் கரடியை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது கே.பி.சிங் என்ற வனக் காவலர் எதிர்பாராதவிதமாக கரடியிடம் சிக்கிக் கொண்டார்.

அவரை கடித்துக் குதறி கரடி கொன்றுவிட்டது. இந்த காட்சி செல்போனில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கொடூரமான காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x