Published : 31 Jan 2017 09:24 AM
Last Updated : 31 Jan 2017 09:24 AM

காஷ்மீரில் பனியில் மீட்கப்பட்ட 5 வீரர்கள் பலி

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார், எல்லை கட்டுப்பாடுக் கோட்டுப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.

இந்த ராணுவச் சாவடிக்கு செல்லும் பனிப்பாதை சனிக்கிழமை காலை திடீரென உடைந்து உள்வாங்கிய தில் 5 ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் நேற்று சிறப்பு சிகிச்சைக்காக நகர் கொண்டு செல்லப்பட்டனர். என்றாலும் துரதிருஷ்டவசமாக 5 பேரும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்மூலம் காஷ்மீரில் கடந்த 6 நாட்களில் பனியில் புதைந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x