Published : 09 Jul 2017 11:09 AM
Last Updated : 09 Jul 2017 11:09 AM

கல்வீச்சாளர்களை சமாளிக்க துர்நாற்ற வெடிகுண்டு: உ.பி. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறை யில் ஈடுபடும் கல்வீச்சாளர்களை சமாளிக்க உ.பி.யை சேர்ந்த விஞ்ஞானிகள் துர்நாற்ற வெடிகுண்டை (ஸ்டிங் பாம்) கண்டுபிடித்துள்ளனர்.

கலவரத்தில் இந்த குண்டு வீசப்பட்டால், அதில் இருந்து வெளியேறும் புகையாலும், ஏற்றுக் கொள்ளவே முடியாத துர்நாற்றத்தாலும், வன்முறையா ளர்கள் அங்கிருந்து கலைந்து செல்வார்கள் என கூறப்படுகிறது.

எனினும் இந்த வெடிகுண்டால் மனிதர்களின் உயிருக்கோ, உடல் நலத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என இதை கண்டுபிடித்த உ.பி.யின் கன்னாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த வாசனை திரவியங்கள் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெடிகுண்டு எப்படி செயல்படுகிறது என்பதை குறு, நடுத்தர மற்றும் சிறு தொழிற் சாலைகள் துறை இணையமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் விஞ்ஞானிகள் விளக்கி காண்பித்துள்ளனர். இதைக் கண்டு திருப்தி அடைந்த அமைச்சர், இந்த வெடிகுண்டை ராணுவத்தில் சேர்த்துக் கொள் ளும்படி பரிந்துரைத்து, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது அந்த வெடிகுண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு ஆராய்ச்சி பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் திருப்தி ஏற்பட்ட தும், வெடிகுண்டை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கான ஒப்புதல் முறைப்படி வழங்கப் படும் என கூறப்படுகிறது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x