Published : 07 Dec 2016 08:29 AM
Last Updated : 07 Dec 2016 08:29 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து கர் நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு செல்லும் பேருந்துகளும் லாரிகளும் இரு மாநில எல்லை களிலே நிறுத்தப்பட்டன. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத் துக்கு செல்லும் கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் எல்லையில் தற் காலிகமாக நிறுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் தமிழக அரசின் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
கர்நாடகாவில் இருந்து சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர் களுக்கு இயக்கப்படும் பேருந்து கள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே பேருந்து நிலையங்களில் காத்திருந்தனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
எல்லையில் பாதுகாப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் சாம்ராஜ் நகர், மேட்டூர், குண்டல்பேட்டை ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள இரு மாநில எல்லை களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் மாலை வரை கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் தனியார் பேருந்துகள், வேன், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அமைதி திரும்பிய பிறகே, கர்நாடகாவில் இருந்து வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
இந்த சூழலால் சுற்றுலா பயணி களும், வெளியூர் செல்லும் பயணிகளும், சரக்கு வாகனங் களும் நீண்ட நேரம் எல்லையிலே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான சரக்குகள் எல்லையிலே வரிசை யாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT